google-site-verification: google71af9333e4ef08fc.html Nature: July 2020

Friday, July 31, 2020

கபசுரகுடிநீர் 64 வகை வைரஸ் காய்ச்சலுக்கு மருந்தாக இருக்கும்

கபசுர குடிநீர்
கபசுர குடிநீர்


கொரோனா தொற்று வேகமாகப் பரவிவரும் நிலையில், இந்தியாவின் மாற்று மருத்துவ முறைகளில் ஒன்றான சித்த மருத்துவத்தில் கபசுர குடிநீர் ஒரு மருந்தாக முன்வைக்கப்பட்டது. தமிழ்நாட்டின் பல இடங்களில் இந்த மருந்தை வாங்க மக்கள் கடைகளில் குவிந்தனர். உண்மையில் கபசுர குடிநீர் என்பது என்ன, அது கொரோனாவை குணப்படுத்துமா, 


நிலவேம்பு குடிநீர், கபசுர குடிநீர், ஆடாதோடை மணப்பாகு என உடலுக்கு எதிர்ப்பு சக்தியை வழங்கக்கூடிய மூலிகை நீர் அரசு சித்த மருத்துவமனைகளில் வழங்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாக பரவிவரும் நிலையில் அலோபதி மருத்துவ துறை மருந்துகளை கண்டறிவதில் வேகம் காட்டிவருகிறது.

இந்நிலையில் சித்தா, ஆயுர்வேத, யுனானி, ஹோமியோபதி மருத்துவர்களிடம் வைரஸை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து ஆலோசனையும் மேற்கொள்ளப்பட்டது. அப்போது இந்திய சித்தமருத்துவர்கள் கபசுர குடிநீரை பரிந்துரை செய்தார்கள்.அதே நேரத்தில் இவை கொரோனா வைரஸை குணப்படுத்தும் என்று நினைத்திட வேண்டாம். இவை கொரோனாவாக இருக்கலாம் என்று தனிமைப்படுத்தியவர்களுக்கும், அறிகுறிகள் இலேசாக இருக்கும் போது சிகிச்சை அளிப்பவர்களுக்கும் கபசுரகுடிநீரை கொடுக்கலாம். மேலும் அலோபதி சிகிச்சை பெறுபவர்களுக்கும் இந்த குடிநீரை கொடுக்கலாம் என்றும் பரிந்துரை செய்திருக்கிறார்கள் சித்த மருத்துவர்கள்.

தற்போது அரசு சித்தமருத்துவமனைகளில் மக்களுக்கு கபசுரகுடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. கபசுர குடிநீர் குறித்து மேலும் தெரிந்துகொள்வோம். யூகி முனி சித்தர் பொதுவாக காய்ச்சலை 64 வகை காய்ச்சலாக பிரித்திருக்கிறார். அதில் கபசுரகுடிநீர் வைரஸ் காய்ச்சலுக்கு மருந்தாக இருக்கும் என்றும் கூறியிருக்கிறார். காய்ச்சல் வராமல் தடுப்பதற்கும் காய்ச்சல் வந்தபிறகு குணப்படுத்துவதற்கும் இதை பயன்படுத்தலாம் என்றும் வழிகாட்டியிருக்கிறார்.


மூலிகை பொருள்களை கலந்து தயாரிக்கும் கபசுரக்குடிநீரை வீட்டில் தயாரிப்பது கடினமானது. இதில் சுக்கு, திப்பிலி இலவங்கம், சிறுகாஞ்சேரி வேர், அக்ரகாரம், முள்ளி வேர், ஆடாதோடை இலை, கற்பூரவள்ளி இலை, கோஷ்டம், சீந்தில் தண்டு, சிறுதேக்கு, நிலவேம்பு சமூலம், வட்ட திருப்பி வேர், கோரைக்கிழங்கு, கடுக்காய்த்தோல் என 15க்கும் மேற்பட்ட மூலிகை பொருள்கள் கலக்கிறார்கள். அதோடு இதை சுத்தம் செய்வதும் கடினம். அதனால் இதை சித்தமருந்து கடைகளில்கிடைக்கும் கபசுர பொடியாக வாங்கி பயன்படுத்தலாம்.


ஒரு டம்ளர் நீரை கொதிக்க வைத்து அரை டம்ளராக ஆகும் வரை சுண்ட வைத்து இறக்கி வடிகட்டி கால் தம்ளர் குடித்து வரவும். ஒவ்வொரு முறையும் அப்போது கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்க வேண்டும். மூக்கு, தொண்டை, சுவாசப்பாதையில் வரும் தொற்றுகளை நீக்கும் வல்லமை கொண்டது இந்த கபசுரக்குடிநீர். குறிப்பாக மூச்சுவிடுவதில் இருக்கும் சிரமத்தை குறைக்க உதவுகிறது.

சிறு பிள்ளைகளுக்கு கொடுக்கும் போது இந்த நீரை வடிகட்டி அதனுடன் இனிப்புக்கு சுத்தமான தேன் அல்லது பனங்கருப்பட்டி கலந்து கொடுக்கலாம். இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கொடுக்கும் போது மருத்துவரை கலந்தாலோசித்து கொடுப்பது நல்லது. கர்ப்பமாக இருக்கும் பெண்கள் கபசுரகுடிநீரை தவிர்ப்பது தான் நல்லது.

Tuesday, July 28, 2020

பழங்களின் ராணி - கொய்யாப்பழம்

பழங்களின் ராணி -  கொய்யாப்பழம்

இப்பழத்தின் தனிப்பட்ட மணம், சுவை மற்றும் மருத்துவகுணங்களின் காரணமாக பழங்களின் ராணி என்பதோடு சிறந்த பழம் என்ற அந்தஸ்தையும் இது பெற்றுள்ளது.

கொய்யாவின் மருத்துவப் பயன்கள் 
ஒரு பிடி கொய்யா இலையை அரித்து ஒரு மிளகாயுடன் வதக்கி ஒரு லிட்டர் நீரில் போட்டுக் கால் லிட்டராகக்காச்சி அரை மணிக்கு ஒரு முடக்கு வீதம் கொடுத்து வர வாந்தி, பேதி (காலரா) மந்தம், வாய்பொருமல், வறட்சி, தாகம் அடங்கும்.
கொய்யா மரத்தின் இலைகளைக் கொண்டு வந்து இலேசாக வதக்கி ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு நன்றாகக்  கொதிக்க வைத்து இறக்கி, சூடாக இருக்கும் பொழுதே வடிகட்டி வைத்துக் கொண்டு,  ஒரு கோழி முட்டையை உடைத்து அதன் மஞ்சள் கருவை மட்டும் எடுத்து ஒரு பாத்திரத்தில் விட்டு நீர் போல அடித்து வைத்துக் கொண்டு, ஒருவர் கசாயத்தை அடித்திக் கொண்டிருக்கும் பொழுதே மற்றவர் கோழி முட்டை மஞ்சள் கரு எடுத்து அந்தக் கசாயத்தை விட்டுக் கொண்டே இருக்க வேண்டும். மஞ்சள் கரு எல்லாவற்றையும் விடும் வரை அடித்துக் கொண்டே இருக்க வேண்டும். பிறகு அந்தக் கசாயத்தில் பாதியளவைக் காலையிலும் பாதியளவை மாலையிலும் கொடுத்து வந்தால் நாட்பட்ட சீதபேதியானாலும் நின்று விடும். மூன்று வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளைக்குக் காலை, பகல் மாலை ஆக ஒரு நாளைக்கு மூன்று வேளை சங்களவு கொடுத்து வர  நாட்பட்ட சீதபேதி நின்று விடும்.
இரண்டு கைப்பிடளவு நறுக்கிய கொய்யா இலையை லேசாக வதக்கி இரண்டு டம்ளர் அளவுக்குத் தண்ணீர் விட்டு நன்றாகக் கொதிக்க வைத்து இறக்கி, நீரை வடிகட்டி அந்த நீரைக் கொண்டு ஆசன வாயில் உள்ள மூலத்தை ஒரு நாளக்கு மூன்று முறை கழுவி வந்தால் நாளா வட்டத்தில் மூலம் சுருங்கி கடைசியில் மூலமே இல்லாமல் போகும். ஆனால் மூலம் சுருங்கும் வரை கழுவி வர வேண்டும்.
கொய்யா இலையைக் கொண்டு வந்து அதை வாயில் போட்டு மென்று அதைக் கொண்டே பல் துலக்கி வந்தால் பல் சம்பந்தமான எல்லாக் கோளாறுகளும் குணமாகும். இதனால் ஆடும் பற்கள் கெட்டி படும். பற்சொத்தை நீங்கும். எகிர் வீக்கம் வாடி விடும். பற்களில் ஏற்படும் அரிப்பு அதாவது தேய்வு மாறி பல் வெண்ணிறமாகும்.  பல்லில் உள்ள அழுக்கு நீங்கும்.

கொய்யா மரத்தின் ஜல்லி வேர் அதாவது மெல்லிய வேர்களைக் கொண்டு வந்து அதைப் பொடியாக நறுக்கி ஒரு கைப்பிடியளவு எடுத்து ஒரு சட்டியில் போட்டு இரண்டு டம்ளர் அளவு தண்ணீர் விட்டு இரவு முழுதும் மூடிவைத்து, காலையில் ஒரு டம்ளர் அளவு கொடுத்து வந்தால் வயிற்றுப் போக்கு நன்று விடும். குழ்ந்தைகளுக்கு ஒரு சங்களவு கொடுத்து வந்தால் வயிற்றுப் போக்கு நிற்கும். இந்த நீரைக் கொண்டு மூலத்தைக் கழுவி வந்தால் மூலம் சுருங்கு விடும். ஆனால் தொடர்ந்து 21 நாட்கள் வரை கழுவி வந்தால் தான் குணம் தெரியும்.
மலச்சிக்கலினால் கஷ்டப் படுகிறவர்கள் இரண்டு தினங்கள்க்கு ஒரு முறை கொய்யாப் பழத்தைத் தின்று வந்தால் மலம் இளகளாகச் சரளமாக இறங்கும். சிறுநீர் நன்கு பிரியும். எரிச்சல் குணமாகும்.

கொய்யாக் கொழுந்து இலையை மென்று தின்று இலகுவான உணவு உண்ண செரியாமை, மந்தம், குடல் வாயு தீரும். 

மருத்துவ குணங்கள்

கொய்யாப்பழம் கிடைக்கும் பருவத்தில் இதனை தினமும் அளவோடு உண்டால் ஆண்டுமுழுவதும் டாக்டரைப் பார்க்க வேண்டிய அவசியம் இருக்காது என்பது கொய்யாவைப் பற்றிய மறுக்க முடியாத உண்மை. 

சர்க்கரை நோய் குணமாக

இப்பழத்தில் உள்ள நார்ச்சத்து உடல் உட்கிரகிக்கும் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துகிறது. இதனால் சர்க்கரை நோய் கட்டுப்படுத்தப்படுகிறது.

மேலும் இப்பழத்தினை தொடர்ந்து உண்ணும்போது 2-ம் வகை சர்க்கரை நோய் வருவது தடுக்கப்படுகிறது.

உண்மையில், அனைத்துவிதமான சமச்சீர் சத்துக்களும் நம் ஊர் பழங்களில் உள்ளன. சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், ரத்தத்தில் கொழுப்பு அளவு அதிகரிப்பு ஆகிய இந்த மூன்றும்தான் இன்றைக்கு இருக்கிற மிக முக்கியமான பிரச்னைகள். இந்த மூன்றுக்குமான அருமருந்து, கொய்யாப் பழம்தான்.

உடலில் சேரும் நச்சுக்களை வெளியேற்றி, செல்களைப் புதுப்பிக்கும் திறன்கொண்ட 'ஆன்டி ஆக்சிடன்ட்’ ஆப்பிள், மாதுளை, வாழைப்பழம், திராட்சை அனைத்தையும்விட, கொய்யாவில் அதிகம் இருக்கிறது என்று ஆராய்ச்சி முடிவுகள் சொல்கின்றன.
தோல் பிரச்னைகளுக்கு தீர்வைத் தரும். மலச்சிக்கலை நீக்கும். கல்லீரலைப் பலமாக்கும். புற்றுநோயாளிகளுக்கு மிகவும் நல்லது.

ஸ்கர்வி நோயிலிருந்து பாதுகாப்பு

ஸ்கர்வி நோய் என்பது விட்டமின் சி குறைபாட்டினால் பற்கள் மற்றும் ஈறுகளிலிருந்து இரத்தம் வடிதல் ஆகும். கொய்யா அதிக அளவு விட்டமின் சி-யைக் கொண்டுள்ளது. எனவே விட்டமின்-சி குறைபாட்டினால் ஏற்படும் ஸ்கர்வி நோயைத் தடுக்க கொய்யாவை அடிக்கடி உண்ண வேண்டும்.

கொய்யாவை உண்ணும் முறை

கொய்யாப்பழத்தின் தோலில்தான் அதிக சத்து உள்ளது. உள்ளே போகப் போக சத்து குறைவாக உள்ளது. எனவே பழத்தினை நன்கு கழுவிவிட்டு துண்டுகளாக்கியோ அல்லது கடித்துச் சாப்பிடுவதோ நல்லது.

சாப்பிடும் முன் இப்பழத்தினை உண்ணலாம். உணவு அருந்திய உடனே உண்ணக் கூடாது. சிறிது நேரம் கழித்து உண்பது நல்லது.

கொய்யாப் பழம் நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டுவதிலிருந்து உங்களின் உடல் எடையைச் சீரான விகிதத்தில் மேம்படுத்தவும் கொய்யாப் பழம்  மிகவும் உதவி செய்கிறது.
 
கொய்யாவில் தான் அதிக வைட்டமின் சி உள்ளது. நார்ச்சத்து அதிகம் கொண்ட கொய்யாப்பழத்தில் வைட்டமின் சி, ஏ, இ போன்ற சத்துக்களுடன் போலிக் அமிலம், பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற தாது சத்துக்களும் உள்ளன.


Monday, July 27, 2020

சிறுநீரகங்களில் அதிகளவில் சேரும் உப்புகளை கரைத்து சிறுநீரகங்களின் நலனை காக்கிறது கற்பூரவல்லி


சிறுநீரகங்கள் நமது ரத்தத்தில் உள்ள அதிகப்படியான உப்புகள் மற்றும் இதர பொருட்களை சுத்திகரித்து, அக்கழிவுகளை சிறுநீர் வழியாக நமது உடலில் இருந்து வெளியேற்றுகிறது. கற்பூரவள்ளி செடிகளின் இலைகள் சிறுநீரை அதிகம் பெருக்கும் தன்மை கொண்டது. இது சிறுநீரகங்களில் அதிகளவில் சேரும் உப்புகளை கரைத்து சிறுநீரகங்களின் நலனை காக்கிறது

கற்பூரவல்லியின் இலைகளே மருத்துவத்தில் பயன்படுபவை.கற்பூரவல்லி இலையைக் கையால் தொட்டுத் தடவி, முகர்ந்தால் ஓமத்தின் மணம் தரும். இலையில் சுரக்கும் ஒருவிதமன ஆவியாகும் தன்மையுடைய நறுமண‌ எண்ணெய் இந்த மனத்திற்குக் காரணமாகும்.

கற்பூரவல்லி வறண்ட சமவெளிகள், சரிவான நிலப்பகுதிகளில்,கொத்தான இலைத் தொகுப்புகளுடன் காணப்படும். பல்லாண்டுகள் உயிர் வாழ்பவை. இலைகள், மணமுள்ளவை, பசுமையானவை, தடிப்பானை சதைப்பற்றுடன் காணப்படும்.

கற்பூரவல்லி இலைகளை கசக்கி சாறு பிழிந்து சிறிதளவு நல்லெண்ணெய் சேர்த்துக் குழப்பி நெற்றியில் பூச தலை வலி குணமாகும்.

கற்பூரவல்லி தண்டுகள் மெல்லியதாகவும், வளைந்தும், ஒடியும் தன்மையுடனும் இருக்கும். நீலநிறமான பூங்கொத்துகள் வாசனையுடன் காணப்படும்.

கற்பூரவல்லி இலைகள் கார்ப்புச் சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டவை. உடல் வெப்பத்தை அதிகரிக்கும்; வியர்வையை அதிகமாக்கும்; கோழையகற்றும்.

கற்பூரவல்லி காசநோய், கபக்கட்டு, அம்மைக் கொப்புளம் ஆகியவைகளைக் கட்டுப்படுத்தும்.குழந்தை மருத்துவத்திலும் கற்பூரவல்லி உயர்ந்த இடத்தை வகிக்கின்றது. மழைக்காலத்தில் ஏற்படும் ஜலதோஷத்தைத் தவிர்க்க, கற்பூரவல்லி இலையை பஜ்ஜி செய்து சாப்பிடலாம்.

குழந்தைகளின் மார்பில் கட்டிய சளி கரைய பசுமையான கற்பூரவல்லி இலைகளைத் தேவையான அளவு சேகரித்துக் கொள்ள வேண்டும். இதனை, இளஞ்சூடாக வதக்கி, சாறு எடுத்து, ஒரு தேக்கரண்டி அளவு சாற்றுடன், அதே அளவு தேன் கலந்து குடிக்கக் கொடுக்க வேண்டும்.

குழந்தைகளுக்கு ஏற்படும் இருமல் குணமாக ஒரு தேக்கரண்டி கற்பூரவல்லி இலைச் சாற்றுடன் ¼ தேக்கரண்டி சர்க்கரை கலந்து உள்ளுக்குள் கொடுக்க வேண்டும்.

ஜலதோசம் கட்டுப்பட இரண்டு நாட்கள் காலை, மாலை வேளைகளில் கற்பூரவல்லி இலைச் சாறு ¼ டம்ளர் அளவுட‌ன் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து குடிக்க வேண்டும்.

ஆஸ்டியோபொராஸிஸ் ஆஸ்டியோபொராஸிஸ் என்பது உடலில் இருக்கும் எலும்புகள் மற்றும் மூட்டு பகுதிகளை பாதிக்கும் ஒரு நோயாகும். இந்த பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு எலும்புகள், மூட்டுகள் தேய்மானம் அடையவும் செய்கிறது. கற்பூரவள்ளி இலைகளில் எலும்புகள் , மூட்டுகளின் நலத்தை மேம்படுத்தும் ஒமேகா 6 என்கிற வேதிப்பொருள் அதிகம் உள்ளது. இந்த இலைகளை கொண்டு செய்யப்பட்ட தைலத்தை மூட்டுகள், எலும்பு பகுதிகளில் தேய்த்து வருவது இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த நிவாரணம் அளிக்கும்.

ஜுரம் சீதோஷண நிலை மாறுபாடு காரணமாக பலருக்கும் அப்பருவ காலத்தில் ஜுரம் ஏற்படுவது இயற்கையானது தான். இந்த ஜுரத்தை போக்குவதற்கு உடனடியாக ஆங்கில வழி மருந்துகளை நாடுவதற்கு முன்பு சில கற்பூரவள்ளி கசக்கி அதன் துளிகளை உள்ளுக்கு அருந்துவதாலும், நெஞ்சு,கழுத்து மற்றும் நெற்றி பகுதிகளில் கற்பூரவள்ளி இலைகளை நன்கு கசக்கி சூடு பறக்க தேய்த்து கொள்வதாலும், ஜுரம் சீக்கிரம் நீங்கும். 

ஆஸ்துமா சுற்றுசூழல் மற்றும் காற்றில் ஏற்படும் மாசுகள் நிறைந்த காற்றை அதிகம் சுவாசிக்கும் நிலையில் வருபவர்களுக்கு ஆஸ்துமா னாய் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம். ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சில சமயங்களில் மூச்சிரைப்பு அதிகம் ஏற்படும். ஆஸ்துமா நோய் பாதிப்பு கொண்டவர்கள் தினமும் கற்பூரவள்ளி செடியின் இலைசாற்றை பனங்கற்கண்டு, தேன் போன்றவற்றோடு கலந்து சாப்பிட ஆஸ்துமாவால் ஏற்படும் மூச்சிரைப்பு நீங்கும்.

இதன் இலைச்சாற்றைக் குழந்தைகளுக்கு கால் முதல் அரைத் தேக்கரண்டியளவு முலைப்பாலோடு சேர்த்துக் கலக்கிக் கொடுக்கலாம்...பெரியவர்களுக்கு கால் முதல் அரை அவுன்சு வீதம் சிறிது சர்க்கரையுடன் சேர்த்துக்கொடுக்கலாம்...இது சீதளத்தினாலுண்டான கபத்தைக் கண்டிக்கும்...வியர்வையை உண்டாக்கி உடம்பின் கொதிப்பைத் தணியச்செய்யும்..

தொற்று நோய்கள் போக்கும் துளசி


காலையில்5 துளசி இலைகளை  தண்ணீரில் தவறாமல் விழுங்கினால் பல வகையான தொற்று 

நோய்கள் போக்கும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

உடல் எடை குறைய

துளசி இலைச்சாறுடன் எலுமிச்சம் பழம் சேர்த்து சிறிது சூடாக்கி அதனுடன் தேன் கலந்து, உணவுக்குப்பின் உட்கொண்டால் உடல் எடை குறையும்.

தொண்டைக்கம்மல், வலி நீங்க


தினமும் துளசியிலையை காலையில் வெறும் வயிற்றில் பச்சையாக மென்று சாறு இறக்கினால், சளி, தொண்டைக்கட்டு நீங்கும். உடலில் உள்ள நச்சுத்தன்மையும் நீக்கும்.

10 துளசியிலை எடுத்து அதனுடன் 5 மிளகு சேர்த்து நசுக்கி 2 டம்ளர் நீர்விட்டு அரை டம்ளராக சுண்டக் காய்ச்சி கஷாயம் செய்து சூடாக அருந்தி, பிறகு சிறிது எலுமிச்சை சாறு அருந்திவிட்டு நல்ல கம்பளி கொண்டு உடல் முழுவதும் போர்த்தி விட்டால் மலேரியா காய்ச்சல் படிப்படியாக குறையும்.

சிறுநீரகக் கல் நீங்க

துளசி இலையை ஒரு செப்புப் பாத்திரத்தில் நீர்விட்டு இரவு முழுவதும் ஊறவைக்க வேண்டும். மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் அந்த நீரை எடுத்து இலையோடு சேர்த்து அருந்தி வந்தால் சிறுநீரகக் கல் படிப்படியாக கரையும். இவ்வாறு ஒரு மண்டலம் அருந்துவது நல்லது. இதனால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற வேதிப் பொருட்கள், விஷநீர்கள் சிறுநீர் வழியாக வெளியேறி ரத்தத்தை சுத்தமாக்கும்.

சிறு சிறு பூச்சிக் கடிகளின் விஷம் நீங்க

கண்ணுக்குத் தெரியாத சிறு சிறு பூச்சிக் கடிகளால் சிலருக்கு உடலில் அலர்ஜி உண்டாகி சருமம் பாதிக்கப்படும். அல்லது வேறு வகைகளில் பாதிப்பு ஏற்படும். இந்த பூச்சிகளின் விஷத்தன்மை நீங்க துளசி இலையை சாறு எடுத்து அதனுடன் சம அளவு தும்பைச் சாறு கலந்து ஒரு வாரம் அருந்தி வந்தால் விஷம் எளிதில் இறங்கும்.

வாய்ப்புண் , வாய் நாற்றம் நீங்க

வயிற்றில் புண்கள் இருந்தால் வாயிலும் புண்கள் உண்டாகும். இதனால் வாய் நாற்றம் வீசும். வாய்ப்புண் ஆற துளசி இலையை பறித்து நீர்விட்டு அலசி, வாயில் வைத்து மென்று மெல்ல மெல்ல சாறினை உள்ளிறக்கினால், வாய்ப்புண் வயிற்றுப்புண் ஆறும். வாய் நாற்றமும் நீங்கும்.

மன அழுத்தம் நீங்க

மன அழுத்தத்தைப் போக்கும் குணம் துளசிக்கு உண்டு. துளசி இலையை நன்கு மைபோல் அரைத்து அதனுடன் வில்வ இலை சாறு சேர்த்து லேசாக சூடாக்கி அருந்தினால் மன அழுத்தம் நீங்கும்.

பற்கள் சம்பந்தப்பட்ட நோய்கள் தீர

துளசி இலை, புதினா இரண்டையும் சம அளவு எடுத்து நிழலில் உலர்த்தி பொடி செய்து அதனுடன் கிராம்புப் பொடி சேர்த்து தினமும் பல் துலக்கி வந்தால், பற்களின் சொத்தை, பல் ஈறு வீக்கம் மேலும் பற்கள் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் தீரும்.

தலைவலி தீர

ஒரு கைப்பிடி துளசி இலை மூன்று மிளகு, 1 துண்டு இஞ்சி எடுத்து நன்கு அரைத்து நெற்றியில் பற்று போட்டால் தலைவலி நீங்கும்.

கண்நோய்கள் தீர

துளசி இலை ஊறிய நீரை 1 மண்டலம் அருந்தி வந்தால் முக்குற்றங்களில் ஒன்றான பித்த அதிகரிப்பு குறையும். இதனால் கண் நரம்புகளின் சூடு குறைந்து நரம்புகள் பலப்படும். கண் சம்பந்தப்பட்ட நோய்கள் அணுகாது.

சரும நோய்கள் நீங்க

தேமல், படை உள்ள இடங்களில் துளசியும் உப்பும் சேர்த்து அரைத்து பூசி வந்தால் சரும நோய்கள் நீங்கும்.

துளசி இலைக்கு உள்ளத்தைத் தூய்மையாக்கும் குணமும் உண்டு. 

  • இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்தும் திறன் துளசிக்கு உண்டு.
  • உடல் எடையைக் கட்டுப்படுத்துவதில் துளசியும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
  • தேநீர் சேர்க்கும்போது, ​​சில துளசி இலைகளைச் சேர்ப்பது குளிர், காய்ச்சல் மற்றும் தசை பேனாக்களிலிருந்து நிவாரணம் அளிக்கிறது.
  • துளசி ஒரு காபி தண்ணீரில் சிறிது ராக் உப்பு மற்றும் பிசி உலர் இஞ்சியை எடுத்து மலச்சிக்கல் குணமாகும்.
  • துளசியின் சில புதிய இலைகளை கொண்டு அசுத்தமான நீரினை சுத்திகரிக்கலாம்.

Saturday, July 25, 2020

ஆடி பெருக்கு

ஆடி திருவிழாக்கள் மற்றும் வழிபாட்டுடன் குறிக்கப்பட்ட தமிழ் நாள்காட்டியில் ஒரு புனித மாதம். ஆடி ஜூலை நடுப்பகுதியில் ஆகஸ்ட் நடுப்பகுதியில் விழுகிறது. இந்த மாதம் சமஸ்கிருதத்தில் ஆஷாடா என்றும் மலையாளத்தில் கர்காடா என்றும் அழைக்கப்படுகிறார்கள். சூரியனை அல்லது தட்சிணயனையை நோக்கி சன் செல்லும் போது, ​​ஆடி காலத்தின் துவக்கத்தை குறிக்கிறது. இந்த காலம் அடுத்த ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கப்படுகிறது, இது தேவர்களின் இரவு.

இயற்கை வழிபாடு செய்ய நேரம் இது விவசாயிகளுக்கான விவசாய பருவத்தின் தொடக்கமாகும். கோடை காலங்களில் நீண்ட நீளமான எழுத்துப்பகுதிக்குப் பிறகு, இந்த காலம் மழைக்காலத்தின் ஆரம்பத்தை குறிக்கிறது, அங்கு நீர்வழிகள் பெருமளவில் பெருகி வருகின்றன.

மக்கள் இயற்கைக்கு மதிப்பளித்து, பூமியிலுள்ள உயிர்களை காப்பாற்றுவதற்காக நதிகளுக்கு வழிபாடு செய்கின்றனர். விவசாயிகள் நல்ல அறுவடைக்கு ஆறுகளை வணங்கி, எப்போதும் ஏராளமாக ஓடுகிறார்கள் என்று பிரார்த்தனை செய்கின்றனர்.

விதைகள் விதைக்கும் காலம் இது. மழைக்காலத்தில் பயிர்கள் பயிரிடலாம்.

நதிகள் புனிதமாகக் கருதப்படுகின்றன மற்றும் தெய்வங்கள் என கருதப்படுகின்றன. திருமணம், கருவுறுதல், நல்ல வாழ்க்கை ஆகியவற்றின் சத்தியத்தை நிறைவேற்றுவதற்காக அவர்களுக்குக் கடமைகள் வழங்கப்படுகின்றன. கங்கை, கோதாவரி, நர்மதா, கிருஷ்ணா, யமுனா மற்றும் காவேரி போன்ற புனித நதிகள் இந்த நாளில் வழிபாடு செய்கின்றன.

ஆடி பெருகு மற்றும் காவேரி நதி
ஆடி-பெட்டுக், ஆற்றின்-படுக்கைகள், ஏரிகள் மற்றும் கிணறுகள் கொண்டாடப்படும் பிரபலமான திருவிழா ஆகும். பாரம்பரியமாக, இந்த திருவிழா காவேரி நதிப் பெட்டிக்கு கொண்டாடப்படுகிறது. இந்த இடங்களில் வண்ணமயமான அரிசி, பூக்கள், வெண்கலம் இலைகள், மாம்பழ இலைகளில் உதிர்ந்த மண் விளக்குகள் ஆகியவை காவேரி தேவிக்கு அளிக்கப்படுகின்றன.

ஆடி மாதத்தின் 18 வது நாளில் ஆடி பெருக்கு விழுகிறது. இந்த ஆண்டு ஆகஸ்ட் 3, 2015 அன்று விழும். காவிரி நதி ‘தக்ஷினா கங்கா’ என்றும் அழைக்கப்படுகிறது. நதி நீரின் அளவு இன்றியமையாதது என்று நம்பப்படுகிறது.

 

பல நதிகளில் ஒரு சாய்வு எடுத்து மற்றும் அனைத்து தீய மற்றும் நல்ல வாழ்க்கை தெய்வீக ஆசீர்வாதங்கள் எதிராக பாதுகாப்பு இந்த இடங்களில் பெண்கள் செய்ய சடங்குகள் செய்யப்படுகின்றன. பெண்கள் கூட அரிசி மாவு மற்றும் வெல்லம் ஆகியவற்றை விளக்குகளாகவும், நெய் விளக்குகளுக்கு விளக்குகளாகவும் பயன்படுத்துகிறார்கள். கணவன்மார்களின் வாழ்நாள் ஆசீர்வாதங்களுக்காக அவர்கள் ஆற்றில் மிதக்கிறார்கள்.

தென்னிந்திய கிராமப்புறங்களில் உள்ள பல பெண்களுக்கு நாதாதான் அல்லது ஒன்பது விதமான விதைகளை மண் பாண்டங்களில் வளர்க்கின்றன. ஆடி பெருகூவின் இந்த நாளில், அவர்கள் கருவுறுதல், நல்ல அறுவடை, மழைப்பொழிவு, செழிப்பு ஆகியவற்றின் ஆசீர்வாதங்களுக்காக அவர்களை ஆறுகளில் மிதக்கிறார்கள். இது ‘முலைப்பாரி’ அல்லது விதைகளை முளைப்பதைக் குறிக்கிறது. இது இயற்கை சடங்குக்கு அஞ்சலி செலுத்தும் ஒரு நீர் சடங்கு.

ஆடி பெருகுகின் விளக்கம்

சிவபெருமானை வழிபடுவதன் மூலம் சிவனையும் விஷ்ணுவையும் ஒரு பார்வைக்கு ஆசீர்வதிக்கும்படி கோமத்தியின் நினைவாக இந்து புனித நூல்களான பார்வதி தேவி குறிப்பிட்டுள்ளார். சங்கரநாராயணர் என்ற இடத்திலுள்ள சங்கரநாராயணமாக ஆடி பெருகு என்ற இந்த நாளில் சிவன் தோன்றினார்.

ஆகையால், எல்லா பொருள் மற்றும் ஆன்மீக காரியங்களுக்காக நாள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இது உங்கள் விருப்பங்களை நிறைவேற்றும் நாள் மற்றும் உங்கள் வாழ்க்கையை தொடுவதற்கு ஏராளமாக உள்ளது.

இந்த மாதத்தில் பார்வதி தேவி சிறப்பு சடங்குகளுடன் வழிபாடு செய்கிறார். அவர் 18 வகையான அரிசி உணவை வழங்கியுள்ளார்.

வெளிநாட்டுப் பறவைகளை பார்க்கணுமா



சென்னையில் எங்கே திரும்பினாலும் "வெளிநாட்டுப் பறவைகளை பார்க்கணுமா, நேரா வேடந்தாங்கல் போங்க சார். அந்த எடம்தான் சார் உங்களுக்கு கரெக்ட்" என்பது போன்ற இலவச அறிவுரைகள் நிறையவே கிடைக்கும். ஆனால் நம் வீடுகளுக்கு அருகில் இல்லாத பறவைகளைப் பார்க்க சென்னை அருகே வேடந்தாங்கல், பழவேற்காடு, தமிழகத்தின் மத்தியில் இருப்பவர்களுக்கு கோடிக்கரை, தென் மாவட்டம் என்றால் கூந்தங்குளம் போன்ற இடங்களுக்குத்தான் செல்ல வேண்டுமா என்ன?

இல்லை. தென்சென்னையில் பறவைகளின் சொர்க்கபுரி ஒன்று இருக்கிறது. அது பள்ளிக்கரணை சதுப்பு நிலம். சதுப்பு நிலம் என்பது ஏரி போல நீர் தேங்கியிருக்கும் நீர்நிலையல்ல. நன்னீரும் கடலில் இருந்து உள்ளே வரும் உவர் நீரும் சேரும் குறைந்த ஆழமுடைய இடங்கள்தான் சதுப்பு நிலங்கள் ஆகின்றன. பொதுவாக பருவமழை தொடங்கி, நீர்நிலைகள் உயிர் பெறத் தொடங்கும் வேளையில், அப்பகுதிகளை மேலும் சுவாரசியமாக்கும் பறவைகள் கூட ஆரம்பித்து விடுகின்றன. இப்படி அவை கூடும் இடங்களில் பள்ளிக்கரணை முக்கியமானது.

தென்சென்னையில் ஒரு காலத்தில் மத்திய கைலாஷ் வரை 5,000 ஹெக்டேர் பரப்பளவுக்கு விரிந்து இருந்திருக்கிறது பள்ளிக்கரணை. இன்றைக்கு பெருங்குடிக்குப் பக்கத்தில் வெறும் 500 ஹெக்டேர் பரப்பளவுக்கு பத்தில் ஒரு பங்காக இது சுருக்கப்பட்டு விட்டது. எல்லாம் வெறும் 30-40 ஆண்டுகளுக்குள் நிகழ்ந்துள்ளன. அரசின் அலட்சிய மனோபாவம், ரியல் எஸ்டேட் ஆக்கிரமிப்பு, மக்களின் தணியாத வீடு கட்டும் ஆசை போன்றவையே இதற்குக் காரணம். பள்ளிக்கரணையைப் பற்றி நினைத்தவுடன் நம் மனதில் எட்டிப் பார்க்கும் அவல முகம் இதுதான்.

அந்த சித்திரம் மனதில் ஆட, காலைச் சூரியன் உதித்த நேரத்தில் ஒரு நாள் பள்ளிக்கரணை நோக்கிப் பயணித்தேன். வேளச்சேரி பறக்கும் ரயில் நிலையத்துக்கு அருகில் இருக்கும் குட்டையை வழக்கம் போல் எட்டிப் பார்த்தேன். அந்த இடத்தில் குட்டை இல்லை. அழிக்கப்பட்டு அந்த இடம் சமதளமாக்கப்பட்டிருந்தது. 2004ஆம் ஆண்டில் இந்த இடம் வரை பள்ளிக்கரணை பரவியிருந்தது. 2008ஆம் ஆண்டு குட்டை மட்டும் எஞ்சியிருந்தது. இன்று எதுவுமே இல்லை. பாய்ச்சல் வேக வளர்ச்சியின் அடையாளம் தெள்ளத் தெளிவாகத் தெரிந்தது!

அடுத்ததாக பள்ளிக்கரணை சதுப்பு நிலத்துக்குப் போவதற்கு முந்தைய ஜங்ஷனில் மிகப் பெரிய பாலம் குறுக்கு மறுக்காக முளைத்துவிட்டது. இந்தப் பாலத்துக்கு இடது பக்கமாக பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் எஞ்சியுள்ள பகுதி தொடங்குகிறது. இங்கு பெருங்கூட்டமாக நாணல் வளர்ந்திருக்கிறது. பறவைகள் கூடு கட்டி இனப்பெருக்கம் செய்ய, இவை பெரிதும் உதவுகின்றன. ஆனால், ஒரு பகுதி நாணல்கள் தீ வைத்து அழிக்கப்பட்டிருந்தன. தண்ணீரையும் காணோம். இப்படி புறப்பட்டது முதலே எனக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாகவே இருந்தது.

தற்போதுள்ள நிலையில் துரைப்பாக்கம் செல்லும் சாலை பள்ளிக்கரணை சதுப்புநிலத்தை இரண்டாகப் பிளக்கிறது. எஞ்சியுள்ள பள்ளிக்கரணையின் இடதுபுறமாக மெதுவாக நகரநகர பறவைகள் தென்பட ஆரம்பித்தது, என் மனதில் சற்று ஆசுவாசத்தை ஏற்படுத்தியது. முதலில் என் கண்ணில் பட்டவை நீலத் தாழைக்கோழியும் நாமக்கோழியும்தான். முக்குளிப்பான்களையும் பரவலாக பார்க்க முடிந்தது. அனைத்தும் நீர்ப்பறவைகள்.

பெருங்குடி குப்பை கிடங்கில் குப்பை கொட்டுவதை நிறுத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் நியமித்த குழுவின் உத்தரவுக்குப் பின், இப்பொழுது குப்பை கொட்டப்படாதது போன்ற ஒரு தோற்றம் மட்டும் இருக்கிறது. ஆனால், குப்பை கொட்டுவது குறைந்ததாகத் தெரியவில்லை. அந்தக் கிடங்குக்கு முன்புறமாக மிகப் பெரிதாக விரிந்திருந்த பள்ளிக்கரணையின் ஒரு சிறு பகுதியில் தண்ணீர் கிடந்தது. இங்குதான் மேலே குறிப்பிட்ட பறவைகளை அதிக எண்ணிக்கையில், சுமார் ஆயிரத்துக்குள் பார்க்க முடிந்தது. நீலத் தாழைக்கோழிகள் (Purple moorhen) கரையோரமாகவும், காய்ந்த வெங்காயத் தாமரை இடையேயும் பெருமளவு இரை தேடிக் கொண்டிருந்தன. முக்குளிப்பான்கள் (Little Grebe) நொடிக்கொரு தரம் நீரில் மூழ்கி இரை தேடின. நாமக் கோழிகள் (Common Coot) சிறுசிறு குழுக்களாக நீந்தி இரை தேடிய வண்ணமிருந்தன.

பறவைகள் திட்டமிட்ட வாழ்க்கையைக் கொண்டவை. நம்மைப் போல கடைகளிலோ, ஹோட்டலிலோ அவற்றுக்கு உணவு கிடைப்பதில்லை என்பதால், காலை எழுந்தது முதல் சூரியன் சுட்டெரிக்கத் தொடங்குவதற்கு முன்னால் வேகவேகமாக இரை தேட ஆரம்பித்து விடுகின்றன. அவற்றின் உணவு நம்முடையதைப் போல விலைமிகுந்ததும் இல்லை. எதற்கும் பயனற்றது என்றும், சில நேரம் தொந்தரவுக்கு உரியதாகவும் நாம் கருதும் நீர் வாழ் புழுப் பூச்சிகள், கரைகளில் கிடைக்கும் நத்தை, நண்டுகள் போன்றவைதான் அவற்றின் உணவு.

இயற்கையாளர்கள், பள்ளிக்கரணைவாசிகளின் தொடர் போராட்டத்துக்குப் பின், பள்ளிக்கரணையின் மேற்கண்ட பகுதியும், இதற்கு எதிர்ப்புறம் தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனம் (National Institute of Ocean Technology - NIOT) அமைந்துள்ள பகுதியைத் தவிர்த்த, எஞ்சியுள்ள நீர்நிலையையும் பாதுகாக்கப்பட்ட காட்டுப் பகுதி என்று 2007இல் அரசு அறிவித்தது. அதற்கான அறிவிப்புப் பலகைகளை இரு பக்கமும் பார்க்க முடிகிறது. ஆனால் பறவை வேட்டையைத் தடுக்க எந்த வனக் காவலர்களையும் இதுவரை நேரில் பார்க்க முடியவில்லை.

தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனத்துக்குப் பின்புறமுள்ள சதுப்புநிலம் இயற்கையாளர்களிடையே பிரசித்தி பெற்றது. சற்று வெளிப்படையான சப்தத்துடன் மின்சாரத்தை கடத்திக் கொண்டிருக்கும் உயர்அழுத்த மின்கம்பிகளைச் சுமந்த பிரம்மாண்ட மின்கோபுரம் ஒன்று சதுப்புநிலத்தின் நடுவில் இருக்கிறது. கூழைக்கடா எனப்படும் பெலிகன் பறவைகளின் ஆஸ்தான ஓய்விடம் இது. உச்சியில் ஒன்றும், பக்கவாட்டு கம்பிகளில் ஆறேழுமாக உட்கார்ந்து இறகுகளை கோதிக் கொண்டிருந்தன. இந்தப் பகுதியில் ஆயிரக்கணக்கான பல்வேறு வகைப் பறவைகளை பார்க்கலாம். இவ்வளவுக்கும் ஜூலை மாதம் பறவைகள் வரத் தொடங்கும் காலம்தான். இவை பெரும்பாலும் உள்நாட்டு வலசை பறவைகள். கோடை காலத்தில் நாட்டின் பிற பகுதிகளுக்குச் சென்றுவிடும் இவை, பருவமழை பெய்யத் தொடங்கும்போது தெற்கிலுள்ள இதுபோன்ற நீர்நிலைகளுக்கு வந்துவிடுகின்றன. இங்கு இனப்பெருக்கம் செய்துவிட்டு, கோடையில் நீர்நிலை வறளும்போது வேறு பகுதிகளுக்குச் சென்று விடுகின்றன. டிசம்பர்-ஜனவரி மாதத்தில் வெளிநாட்டுப் பறவைகளும் பள்ளிக்கரணைக்கு வலசை வருகின்றன. குஜராத்தில் இருந்து வலசை வரும் பூநாரைகள் (ஃபிளாமிங்கோ), இப்போது பள்ளிக்கரணைக்கும் வருவதாக ஆர்வலர்களின் பதிவுகள் கூறுகின்றன. இது பள்ளிக்கரணைக்கு கூடுதல் முக்கியத்துவத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், நான் சென்றபோது பூநாரைகளை பார்க்க முடியவில்லை.

எதிர்ப்பக்கம் பார்த்த நீலத் தாழைக்கோழிகள், நாமக்கோழிகள், முக்குளிப்பான் ஆகியவற்றுடன் நீளவால் இலைக்கோழிகள் (Pheasant tailed jacana), நெடுங்கால் உள்ளான் (Black winged stilt) உள்ளிட்ட வேறு சில பறவைகளையும் பெரும் எண்ணிக்கையில் பார்க்க முடிந்தது. பறவைகளை நோக்குவதற்கு மிக முக்கியமான தேவை இரு கண்ணோக்கி எனப்படும் தொழில்முறை பைனாகுலர். பறவைகள் அளவில் சிறியவை என்பதாலும் பரந்த பரப்பில் விரவிக் கிடப்பதாலும் வெறும் கண்களால், அவற்றை துல்லியமாகப் பார்க்க முடியாது. வாய்ப்பு இருந்தால் ஒரு கேமராவும் எடுத்துச் செல்லலாம். ஆனால் கேமராவைத் திருப்பி, "க்ளிக்" செய்வதற்குள் சரேலெனக் கடந்து சென்றுவிடும் பறவைகளும் உண்டு.

பறவைகளை நோக்கும்போது, மிகுந்த நிபுணத்துவம் பெற்றவர்களால் மட்டுமே வேகமாகக் கடந்து செல்லும் பறவை எது என்பதை யூகிக்க முடியும். அதுவும்கூட 100 சதவீதம் சரியாக இருக்க வேண்டும் என்பதில்லை. கையில் வைத்திருக்கும் பறவை வழிகாட்டிப் புத்தகத்துடன், பறவையின் முக்கிய அடையாளங்களை ஒப்புநோக்கித்தான் உறுதிப்படுத்திக் கொள்ள முடியும்.

நான் சதுப்புநிலத்தில் பார்வையை செலுத்திக் கொண்டிருந்தபோது மூன்று வாத்துகள் வேகமாக என்னைக் கடந்து சென்றன. அவற்றை அடையாளம் காண முடியவில்லை. இப்பகுதிக்கு பல்வஸ் சீழ்க்கைச் சிறகி (Fulvous Whistling duck) எனப்படும் அரிய வாத்து வந்ததை மெட்ராஸ் நேச்சுரலிஸ்ட்ஸ் சொசைட்டியைச் சேர்ந்த கே. ஞானஸ்கந்தன் பதிவு செய்துள்ளார். இன்றைய பறவை நோக்கலில் நான் பார்த்த இரண்டு புதிய பறவைகள் தண்ணீர்க் கோழி (பெண்) (Watercock), சாம்பல் கதிர்க்குருவி (Ashy prinia). இவற்றை அன்றுதான் முதன்முறையாகப் பார்த்தேன். இது போன்ற அரிய பறவைகளைத் தவிர காக்கை, கள்ளப்பருந்து, கரிச்சான், கதிர்க்குருவிகள் போன்றவற்றையும் பார்த்தேன்.

தாங்கள் போட்ட குப்பையும் சேர்ந்துதான் இங்கு ஊர்க்குப்பையாக கிடக்கிறது என்பதை மறந்து, இப்பகுதி வழியே வாகனங்களில் செல்லும் மக்கள் மூக்கை பொத்திக் கொண்டு செல்கிறார்கள். ஆனால் பறவைகளும், அவற்றுக்கு உணவு தரும் இயற்கையும் வாய்ப்புக் கிடைக்கும் இடங்களில் எல்லாம் செழிப்பையும் வளத்தையும் மட்டுமே பெருக்குகின்றன. மனிதர்கள் எல்லாவற்றையும் உறிஞ்சி சக்கையாக்கித் துப்பிவிட்டு போக நினைக்கும் நேரத்தில், இயற்கை தனக்குக் கிடைக்கும் மிகச் சிறிய வாய்ப்பையும் தவற விடாமல் செழிப்பை பிரசவித்துக் கொண்டே இருக்கிறது. நீண்டகால வேரறுப்புக்குப் பிறகு பள்ளிக்கரணையில் இயற்கை சுழற்சி மெதுவாகத் துளிர்விட ஆரம்பித்திருப்பதை, சீழ்க்கைச் சிறகி, சாம்பல் ஆள்காட்டி (Whitetailed Lapwing) போன்ற அரிய பறவைகளின் வருகை நமக்குச் சுட்டிக்காட்டுகிறது.

நான் வீட்டுக்குத் திரும்ப யத்தனித்த நேரம் என் தலைக்கு மேலே மூன்று பறவைகள் வந்து ஒரு கணம் அந்தரத்தில் நின்றன. அவசரத்தில் அவை நீர்க்காகங்கள் என்று தவறாக நினைத்து விட்டேன். சாலையில் விரைந்து கொண்டிருந்த வாகனங்களின் வேகம், இரைச்சலுக்கு அஞ்சி அவை சற்று நிதானித்து அந்தரத்தில் நின்றிருக்க வேண்டும். மீண்டும் சாலையைக் கடந்து அவை வேகமாகப் பறந்தபோதுதான், நம் பண்டைப் புலவர்கள் பாடிச் சிறப்பித்த அன்றில் பறவைகள்தான் (Glossy ibis) அவை என்பது தெரிந்தது. அன்று தொடங்கி இன்று வரை நாம் அவற்றை மறந்தாலும், அவை நம்மை விட்டுப் பிரியவில்லை. இந்த ஒடிசலான உறவு இன்னும் எத்தனை காலம் நிலைக்குமோ?!

நெல்லிக்கனி

     நெல்லிக்காயை பொறுத்தவரை நாம் விரும்பி உன்ன கூடிய ஒன்று தான் . நெல்லியில் பெரிய நெல்லி , சிறிய நெல்லி என இரு வகை உள்ளது . ...